Friday, 24 May 2013

"வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாகப் பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை இரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது.

என்னது? நான் அழகா?

ஆமாம். நீ அழகோ அழகு. ஆனால், உன் உடம்பிலுள்ள முள்ளுத்தான் உன் அழகைக் கெடுக்கின்றது என்றது ஓநாய்.

ஆனால், அதுதானே என்னைப் பாதுகாக்கின்றது என்றது முள்ளம்பன்றி,

உண்மைதான். ஆனால், அதை எடுத்திட்டால் நீ இன்னும் அழகாயிடுவாய், யாருக்கும் உன்னைக் கொல்ல மனசே வராது என்றது ஓநாய். ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் அகற்றிவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

"இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா..?!" என்று கேட்டது.
அழகாய் மட்டும் இல்லை, அடிச்சுச் சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

No comments:

Post a Comment