இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை
அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன்
தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை
அறிமுகப்படுத்தி யுள்ளது. நுங்குபனை மரம்
தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி
காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
குளுமை தரும் நுங்கு
கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும்.
இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால்
உடலுக்கு ஆரோக்கியத்திற்க ு ஏற்றது.
துவர்ப்பு சுவை
பனங்காயை
வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை
அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட
வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை
நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள் . இதனால் சத்துக்கள்
முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும்
என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும் . முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே
ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.
அம்மைநோய்
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள ் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.
பதநீரும் நுங்கும்
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில்
பதநீர்ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே
அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும்
குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.
வேர்குரு போக்கும் நுங்கு
கோடையில் வேர்குரு தொல்லையினால்அவதிப்படுபவர்கள ் நுங்கை தொடர்ந்து
சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர
சீதக்கழிசல் நீங்கும்.
No comments:
Post a Comment